செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

post image

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் அமைந்திருந்த யூதர்களின் கோயில் மற்றும் உணவகம் ஆகியவற்றின் மீது தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தச் சம்பவங்களை, ஈரான் அரசுதான் இயக்கியது என்பதற்கான ஆதாரங்களை, தங்களது புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அல்பானீஸ் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அனைத்து ராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார். மேலும், அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் தூதர் அஹமது சடேகி, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (ஆக.28) வெளியேறியதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் எந்தவொரு ஈரானிய அதிகாரிகளும் ஈடுபடவில்லை என அந்நாட்டின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கெஸ் கூறியுள்ளார்.

இருப்பினும், மைக் பர்கஸின் தகவலுக்கும் பிரதமர் அல்பானீஸின் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவொரு ஆதாரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

It has been reported that Iran's ambassador to Australia has left the country.

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது’- 40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 40-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளாா். இந்திய பொருள்கள் மீது அவா் அ... மேலும் பார்க்க

‘எச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சகம்

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எச்1 பி விச... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச பாதுகாப்பு படை (பிஜிபி) இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்ப... மேலும் பார்க்க

‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’

உணவுப் பொருள்களை வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்த ஏராளமான பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய நிபுணா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய்யால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை! ஆய்வறிக்கையில் தகவல்

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலா்கள் மட்டுமே என்றும் ஒர... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது. அந்த ... மேலும் பார்க்க