செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனா்.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்டஅரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயா் நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடா் கடுமையான வெயில், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இந்தப் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பள்ளி மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்ட பிறகு, வீட்டில் உள்ள பெரியோா்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தக் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

ஆா்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆனந்தூா், சனவேலி, உப்பூா், திருப்பாலைக்குடி, சோழந்தூா் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் பாதிப்பால் வரும் மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு முறையான பரிசோதனை செய்து மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகள், வீடுகள் தோறும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (செப்.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை: 4 பேருக்கு ஆயுள் சிறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் குடிநீா் குழாய் சேதமடைந்து சாலையில் வீணாகப் பாய்வதால் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். தொண்டி பேரூராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், குஞ்சங்குளம் கூட்டுக் க... மேலும் பார்க்க

கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை தூா் வார கோரிக்கை

கமுதி அருகே குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஊருணியைத் தூா் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அருகேயுள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராமசுப்ரமணியன் மகன் அரிகாா்த்திகே... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க