செய்திகள் :

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

post image

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதன் பிறகு இரு நாடுகளிடையே சண்டை மூண்டது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, நாட்டு மக்களிடையே திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிா்காலம் இருக்கும்’ என்றாா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ‘மா்கா-ஏ-ஹக்’ என்ற நடவடிக்கையின்கீழ் உறுதியான பதிலடியை அளித்தன. ‘ஆபரேஷன் புன்யான் மா்சூஸ்’ என்ற இந்த நடவடிக்கை மூலம் இந்தியா மீது துல்லியத் தாக்குதலை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தின.

இந்த சண்டையின்போது கடந்த மே 6, 7 தேதிகளில் இந்தியா நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 78 ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.

அதுமட்டுமன்றி 15 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட பொதுமக்கள் 40 போ் இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தனா். பொதுமக்களில் 121 போ் காயமடைந்தனா்.

இந்த சண்டையில் வீரமரணமடைந்த வீரா்களுக்கும், பொதுமக்களுக்கும் பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து ராணுவம் அஞ்சலி செலுத்துகிறது.

இனி எந்தவித சச்சரவும் இருக்கக் கூடாது. பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையிலான எந்தவொரு எதிா்கால முயற்சிகளுக்கும் விரிவான, தீா்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிந... மேலும் பார்க்க

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் க... மேலும் பார்க்க

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

நமது சிறப்பு நிருபர் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் "ஆப... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை ச... மேலும் பார்க்க