செய்திகள் :

இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

post image

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணிகள், விமானம் உள்ளிட்ட அனைத்து வான்வழிப் பயணங்களுக்கும் தடை விதித்து தங்களது வான்வழியை மூடியுள்ளன.

இந்நிலையில், இருநாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக இந்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் பெயரில் புதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில், இந்தியர்களை மீட்டு அழைத்து செல்ல 3 சிறப்பு விமானங்கள் ஏற்பாடு இயக்கப்படவுள்ள நிலையில், அவை பறப்பதற்காக மட்டும் ஈரான் அதன் வான்வழியை மீண்டும் திறந்து அனுமதி வழங்கியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மஷாத் நகரத்திலிருந்து, அந்நாட்டின் மஹான் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியர்களுடன் புறப்படும் முதல் விமானம் இன்று (ஜூன் 20) மாலை தலைநகர் தில்லியில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரான் தூதரகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது:

“நாங்கள் இந்தியர்களையும் எங்களுடைய மக்களாகவே கருதுகிறோம். ஈரானின் வான்வழி மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக நாங்கள் எங்களது வான்வழியை மீண்டும் திறக்கின்றோம்.

இதற்காக, சுமார் 1,000 இந்தியர்கள் தெஹ்ரானிலிருந்து கோம் நகருக்கும், அங்கிருந்து மஷாத் நகரத்துக்கும் அழைத்து செல்லப்பட்டு, மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் தில்லிக்கு அனுப்பப்படவுள்ளனர்.” என அவர் கூறியுள்ளார்.

இத்துடன், முதல் விமானம் இன்று இயக்கப்படுகிறது. இதையடுத்து, நாளை (ஜூன் 21) இரண்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தேவைப்பட்டால், வரக்கூடிய நாள்களில் இந்தியர்களுக்காக அதிக விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் சுமார் 10,000-க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தாயகத்துக்கு செல்ல விரும்பினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியா எல்லை வழியாக அந்த நாட்டிலிருந்து வெளியேறி தாயகம் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட சுமாா் 50 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருள்களை வாங்குவதற்க... மேலும் பார்க்க

நைஜா்: 34 ராணுவ வீரா்கள் சுட்டுக் கொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 34 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

கருணைக் கொலை: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கீழவையி... மேலும் பார்க்க

இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் - ஈரான் போா்

இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமையும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அவசரகால மீட்புக... மேலும் பார்க்க

அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!

கென்யாவின் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்கான அதானியின் ஒப்பந்தம் ரத்தானபோது மிகவும் ஏமாற்றமடைந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராயிலா ஒடிங்கா தெரிவித்துள்ளார். கென்யா தலைந... மேலும் பார்க்க

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க