செய்திகள் :

இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!

post image

நாட்டின் சாலை வரைபடங்கள் குறித்து இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், இந்த ஆலோசனையில் இந்திய சந்தைக்கான சேட்ஜிபிடி பற்றிய தயாரிப்பாளர்களின் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன்ஏஐ என்ற செய்யறிவு திறன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்திய சாலை வரைபடங்கள் குறித்து நாட்டின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (பிப். 5) ஆலோசனை நடத்தினார்.

இதில், ஆல்ட்மேன் உடன் பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா, அன்அகாதெமியின் தலைமை செயல் அதிகாரி கெளரவ் முன்ஜால், ஸ்நாப்டீல் துணை நிறுவனர் குணால் பாஹல், சாயோஸ் துணை நிறுவனர் ராகவ் வெர்மா, லிக்ஸிகோ குழுவின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய், ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆக்ரித் வைஷ், ஹெல்திஃபை மீ நிறுவனத்தின் துஷார் வஷிஷ்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலக அளவில் பல்வேறு மொழிகளில் செய்யறிவு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தியாவுக்கு சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செய்யறிவு பயன்பாட்டிற்காக இன்னும் நிறைய பணிகளைச் செய்ய வேண்டும்; எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன என ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆத்ரித் வைஷ் பதிவிட்டுள்ளார்.

ஆல்ட்மேன் உடனான விவாதம் ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக கெளரவ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க

போலி என்கவுன்ட்டா் வழக்கு: முன்னாள் காவல்துறையினா் இருவருக்கு ஆயுள் சிறை

பஞ்சாபில் கடந்த 1992-ஆம் ஆண்டு போலி என்கவுன்ட்டரில் இருவரை கொலை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி மொஹாலி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவா்களு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை- பாதுகாப்பு முகமைகளுக்கு அமித் ஷா உத்தரவு

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவலே இல்லை என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு, அனைத்து பாதுகாப்பு முகமைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் சட்டவிரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க பிஎஸ்எஃப் உத்தரவு

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையொட்டி அந்நாட்டு எல்லைக் காவல் படை (பிஜிபி) அல்லது குடிமக்களால் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு படைத் தளபதிகளுக்கு இந்திய எ... மேலும் பார்க்க