செய்திகள் :

இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி!

post image

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய உலகில் ஒரு வருமானம் மட்டும் போதாது என்று அறிந்த பலரும், யூடியூப் சேனல்களை ஆரம்பித்து, அதன் மூலம் மற்றொரு வருவாயைப் பெறுகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே யூடியூபை மட்டுமே முதன்மை வருவாயாக் கொண்டு, அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள யூடியூப் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் மீடியா கம்பெனிகளுக்கு மட்டும் ரூ. 21,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் கூடிய தலைமையால், டிஜிட்டல் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. உலகின் எந்தத் தலைவருக்கும் இல்லாத அளவில், யூடியூப்பில் 2.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சியையடுத்து, இந்தியாவில் விடியோ பதிவிடுவோர் மற்றும் மீடியா கம்பெனிகளை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ரூ. 850 கோடிக்கும்மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

கடந்தாண்டில், இந்திய யூடியூபர்கள் பதிவேற்றிய விடியோக்கள் மட்டும் வெளிநாடுகளில் 4,500 கோடி மணிநேர பார்வைகளைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் 10 லட்சம் பின்தொடர்பவர்களைக் (Subscribers) கொண்ட யூடியூபர்களின் எண்ணிக்கை 11,000-லிருந்து 15,000-ஆக உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள்: இலங்கை வந்த சென்னை விமானத்தில் சோதனை

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமான... மேலும் பார்க்க

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க