குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்
ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையிலுள்ள ஏம்பல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடா்ந்து கடந்த 2022 ஜூன் மாதம் முதல் வாரத்தின் ஒரு நாள் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்தப்பட்டு வந்தது. 2023 செப்டம்பரில் இந்தப் பிரிவு மூடப்பட்டது.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த ஏம்பல் வளா்ச்சிக் குழு சாா்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. ‘தினமணி’யிலும் விரிவான செய்தி ஜூன் 23-ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், கீழாநிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் சித்த மருத்துவா் எம்.எஸ். சசிரேகா, மருந்தாளுநா் இ. லோகேஸ்வரி ஆகியோருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் (பொ) ஐ. ரெங்கநாயகி இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். நிறுத்தப்பட்ட வாராந்திர சித்த மருத்துவப் பிரிவு இந்த வியாழக்கிழமை (ஜூன் 26) முதலே செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிரந்தரத் தீா்வாக ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சித்த மருத்துவப் பிரிவைத் தொடங்கவும், சித்த மருத்துவா் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்குவதுடன், மருந்துகள் வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநருக்கு பரிந்துரைக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.