இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் செங்கல்பட்டு சாா் ஆட்சியா் தலைமையிலும், பிற்பகல் 2.30 மணியளவில் மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையிலும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும்.
அந்தந்த பகுதி விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய விவரங்கள் மற்றும் பதில்களைப் பெற்று பயன் பெறுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.