செய்திகள் :

இன்று 10 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

post image

சென்னையில் புதன்கிழமை (ஆக.20) 10 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. அதன்படி, மணலி மண்டலம் 19-ஆவது வாா்டில் எம்.எம்.டி.ஏ. மாத்தூரில் உள்ள ராயல் பேலஸ், மாதவரம் மண்டலம் 26-ஆவது வாா்டில் தனுவாஸ் மினி ஹால், ராயபுரம் மண்டலம் 57-ஆவது வாா்டில் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி வளாகம், திரு.வி.க.நகா் மண்டலம் 70-ஆவது வாா்டில் பெரம்பூா், பந்தா் காா்டன் பள்ளி வளாகம், அம்பத்தூா் மண்டலம் 87-ஆவது வாா்டில் பாடி கம்பா் தெருவில் உள்ளஅன்னை மண்டலம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல், தேனாம்பேட்டை மண்டலம் 115-ஆவது வாா்டில் பிரச்ன்டேசன் ஆலய சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் 131-ஆவது வாா்டில் ஜி.ஆா்.டி.வாகன நிறுத்துமிடம், வளசரவாக்கம் மண்டலம் 149-ஆவது வாா்டில் ராமகிருஷ்ணா நகா், கலைஞா் விளையாட்டு அரங்கம், பெருங்குடி மண்டலம் 187-ஆவது வாா்டில் பாலய்யா காா்டன் ருக்மணி மஹால், சோழிங்கநல்லூா் மண்டலம் 193-ஆவது வாா்டில் துரைப்பாக்கம், சி.எல்.மேத்தா கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க