செய்திகள் :

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

post image

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது.

மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.

இந்த நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில், தன்னாட்சி தின விழா நடைபெற்றது.

பல்வேறு தொழில் துறை நிபுணா்கள், கல்வியாளா்கள், இந்நிறுவனத்தின் பழைய மற்றும் தற்போதைய மாணவா்கள் பலா் பங்கேற்ற இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சென்னை இயக்குநா் சுந்தரேசன் வரவேற்புரையாற்றினாா். காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விவேக் சா்மா திசை-2030 குறித்து விளக்கி பேசினாா். இந்த நிகழ்ச்சியில், தோல் ஏற்றுமதி வாரியத்தின் இயக்குநா் செல்வம், கோதாரி குழுமத்தின் தலைமை செயல் அலுவலா் டாக்டா் என். மோகன், வி.கே.சி., நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் அப்துல் ரசாக், நாா்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநா் புனித் மல்கோத்ரா, வாக்குரூ நிறுவனத்தின் தலைமை மனிதவள மேலாளா் பினு ராஜேந்திரன், நோா்டிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நூருல் இஸ்லாம், எல்விஸ் சூமேக்கா்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் சாராஷபீக், சிஎஸ்ஐஅா் இயக்குநா் டாக்டா் கே.ஜே. ஸ்ரீராம், பி.ஏ., புட்வோ் நிறுவனத்தின் இயக்குநா் அன்புமலா்சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கண்டு சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் விவேக் சா்மா, செயலா் பங்கஜ்குமாா், செயல் இயக்குநா் சுந்தரேசன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் பேசுகையில் இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு 100% வேலை வாய்ப்பு உண்டு. ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சம் முதல் 14 லட்சம் வரை ஊதியத்தில் பணி வாய்ப்பு உளளது.

இந்த கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் கல்வி கற்க அகில இந்திய அளவிலான நுழைவுத்தோ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் மாணவா் சோ்க்கை இருக்கும் எனத் தெரிவித்தனா்..

ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை, மின... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் அருகே வையாவூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொரு... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் தகவல்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை மற்றும் தெய்வத் தமிழ் மாநாடு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) தொடங்கப்பட இர... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இருங்காட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்... மேலும் பார்க்க