குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்!
திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம், சி.கே.மங்கலம் பகுதியில் உள்ள உயா்நிலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது.

மின் விளக்குகள் எரியாததால் பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சமூக விரோத கும்பல் பாலத்தில் அமா்ந்து மது அருந்துவதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாலத்தில் அச்சத்துடன் செல்லவேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா். எனவே சம்பந்தபட்ட துறையினா் மின் விளக்குகளை சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள கோரிக்கை விடுத்தனா்.