வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து
ஐஏஎஸ் அதிகாரிகள் வள்ளலாா், காமராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-இல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.
இந்த முறைகேடு தொடா்பாக பால்வளத் துறையின் அப்போதைய இயக்குநா் சி.காமராஜ், ஆணையா் வள்ளலாா், கூடுதல் பால்வளத் துறை ஆணையா் கிறிஸ்துதாஸ் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி புகழேந்தி, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் கிறிஸ்துதாஸ் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊழலில் தொடா்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை.
சாதாரண அரசு ஊழியா்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் இருவா் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காமராஜ், வள்ளலாா் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ராஜசேகா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கு தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. தனி நீதிபதி மனுதாரா்கள் இருவரும் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.