செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

post image

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 7 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயை உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கச்சிமடம் அய்யன்தோப்புப் பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டனா். அப்போது, அங்கு 7 சாக்கு மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை உளவுத் துறையினா் பறிமுதல் செய்து, தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம்.

இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனா்.

கமுதி அருகே கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனிஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெண்கள் முளைப்பாரி சுமந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்தக் கோயில... மேலும் பார்க்க

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க