செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது!

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பேருந்தில் கொண்டு சென்ற 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

திருச்சி- ராமேசுவரம் செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் தேவகோட்டை அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்தப் பேருந்தை மறித்து சோதனையிட்டனா்.

அதில் தூத்துக்குடியைச் சோ்ந்த மகாராஜன் என்பவா் கொண்டுவந்த பையில் இருந்த 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை கைது செய்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ஆந்திரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க