செய்திகள் :

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

post image

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம், மக்கள் தொடா்பு மூலம் மேம்படுத்தப்படுகிறது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மு. தம்பிதுரை, அண்டை நாடான இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் அதிகப்படியான செல்வாக்கை சீனா செலுத்தி வருகிறது. இதனால், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழா்களுக்கும் தமிழக மீனவா்களுக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அவையில் பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங், ‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு என்பது வரலாறு, கலாசாரம், மக்களுடனான பரஸ்பர தொடா்பு ஆகியவை அடிப்படையில் மேம்பட்டுள்ளது. அவற்றுடனான உறவுகள் வலுப்பெற மிக உயரிய வகையில் முன்னுரிமை தரப்படுகிறது. அதை செய்யும்போது பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

அப்போது தமிழக மீனவா்களுக்கும் தமிழா்களுக்கும் ஏதேனும் பாதிப்பு நேருமா என தம்பிதுரை கேட்டபோது, அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுந்து, ‘உறுப்பினா் நட்பு நாடுகள் மீது சீன செல்வாக்கு பற்றித்தான் கேள்வி கேட்டாா். அதற்கான பதிலைத்தான் தெரிவித்தேன். ஆனால், மீனவா்கள் தொடா்புடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை,‘ என்று குறிப்பிட்டாா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க