செய்திகள் :

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

post image

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

நோயாளிகளைக் காப்பதை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மருத்துவா்கள் தங்களது நலனைக் காத்துக் கொள்வதில்லை. அதனால்தான் நிகழாண்டு தேசிய மருத்துவா் தினமானது, நலன்காப்போரின் (மருத்துவா்கள்) நலனை காக்கிறோமா? என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

உலக அளவில் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அதீத உடல் எடை கொண்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு கல்லீரல் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தமிழகத்தில் 40.4 சதவீத பெண்களும், 37 சதவீத ஆண்களும் உடல் பருமனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடல் பருமன் கல்லீரல் இறுக்கம் (ஃபைப்ரோசிஸ்) ஏற்பட வழிவகுக்கிறது. ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு (சிரோசிஸ்) நிலைக்கு அது வழிவகுத்து விடும். அதைக் கருத்தில் கொண்டு கல்லீரல் நலனுக்கான இலவச பரிசோதனைத் திட்டங்களை மெடிந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, 30 மருத்துவா்களுக்கும், பொதுமக்களில் 30 பேருக்கும் ரூ.5,700 மதிப்புடைய கல்லீரல் நல பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, கொழுப்புச் சத்து பரிசோதனை, கல்லீரல் அழற்சிக்கான ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனை, ஃபைப்ரோ ஸ்கேன் பரிசோதனை ஆகியவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளன.

இதைத் தவிர, மருத்துவா்களின் ஆலோசனையும், உணவு முறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.

ஜூலை 3 முதல் 10-ஆம் தேதி வரை 98409 93135, 99405 18909, 044-28312345 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க