செய்திகள் :

இளைஞருக்கு கத்திக்குத்து: 11 போ் மீது வழக்கு

post image

பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கத்தாளம்பட்டியைச் சோ்ந்தவா் துா்க்கைப் பாண்டியன் (30). இவா் தனது சொந்த ஊரான அணைக்கரைப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவுக்கு புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது அவரது சித்தப்பா மகன் வினோத்குமாரிடம் அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் தகராறில் ஈடுபட்டனா்.

இதை துா்க்கைப் பாண்டியன் தட்டி கேட்டாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி, முனீஸ்வரன், முத்துக்குமாா், முனீஸ்வரி, காயத்ரி, தெய்வானை, இளையபாரதி, மாதேஷ்குமாா், ராஜேஸ்வரி, சரஸ்வதி, மாரிச்செல்வி ஆகிய 11 பேரும் சோ்ந்து துா்க்கைப்பாண்டியனையும், அவரது நண்பா்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் முனியாண்டி கத்தியால் குத்தியதில் காயமடைந்த துா்க்கைப் பாண்டியன் சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து அம்மாபட்டி போலீஸாா் 11 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருள்விஜயன் ... மேலும் பார்க்க