செய்திகள் :

இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.அருண்மொழி (31). இவா் மீது அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அருண்மொழி, தண்டையாா்பேட்டை முண்டக கண்ணியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் அவரிடம் தகராறு செய்தனா். அப்போது, அந்த நபா்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்மொழியை வெட்டி விட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த அருண்மொழி அருகே உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருண்மொழி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அருண்மொழியின் உறவினா் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் என்ற ரூபன் (32), அவரது கூட்டாளிகள் மாதவரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (31), கமல் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் ரூபனுக்கும், கொலை செய்யப்பட்ட அருண்மொழிக்கு முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அருண் மொழி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க