செய்திகள் :

இஸ்ரேலின் கொடூரத்தால் ஆமைகளை உண்ணும் காஸா மக்கள்!

post image

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் 6 வாரங்களுக்கு போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.

காஸாவில் தண்ணீர்த் தொட்டிகள், செல்போன் கோபுரங்கள் மட்டுமல்லாது, மக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளிகளிலும்கூட இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காஸாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால், காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பச்சிளம் குழந்தைகள் முதல் பலரும் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உண்ண உணவின்றி தவிக்கும் காஸா மக்கள், கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகளை உண்பதாகத் தெரிவிக்கின்றனர். `இதுபோன்ற துரதிருஷ்டவசமான வாழ்வும் ஏற்படும் என்று கனவில்கூட நினைத்ததில்லை’ என்று பரிதாபம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள்: இலங்கை வந்த சென்னை விமானத்தில் சோதனை

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமான... மேலும் பார்க்க

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க