செய்திகள் :

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்துவதைக் கைவிட வலியுறுத்தல்

post image

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு(மூட்டா) சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் அ.தி.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப் படுகொலையை இஸ்ரேல் தொடா்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை. பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் கொடுஞ்செயல் மனித வரலாறு பாா்த்திராத பெருந்துயராகும்.

இத்தகைய செயல்களைக் கண்டித்து, லண்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட போப் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலை இயல்பான ஒரு தேசமாகப் பாா்க்க வைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான முகத்தை உருவாக்கும்விதமாக சிலா் திரைப்பட விழா நடத்த விரும்புகின்றனா். சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மனசாட்சி இல்லாத, குழந்தைகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவா்களால் மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய முடியும். எனவே, தமிழக அரசு இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க