செய்திகள் :

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

post image

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்களைத் தாக்கி வருகிறது. மேலும், அந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களையும் கொன்று வருகிறது.

இஸ்ரேல் இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதால், 'அணு கசிவு ஏற்படுமோ?' என்கிற அச்சம் தற்போது உலகத்தில் எழுந்துள்ளது.

சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்!

ஈரானில் நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என்று இரு அணுசக்தி நிலையங்கள் இருக்கிறது. இவற்றில் நடான்ஸில் யூரேனியம் அதிகம் இருக்கிறது. காரணம், அணுசக்திக்கு மிக முக்கியமான ஒன்று யுரேனியம். இந்த இரண்டு நிலையங்களும் நிலத்தடியில் அமைந்துள்ளது.

தற்போது அணு கசிவு இருக்கிறதா?

கடந்த திங்கட்கிழமை, சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி பேசுகையில்...

"இப்போதைக்கு இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் எந்தவித அணு கசிவும் இல்லை. ஆனால், இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அணுசக்தி கசிய அதிக வாய்ப்பிருக்கிறது" என்று எச்சரித்துள்ளார்.

ஏன் கசிவு ஏற்படலாம்?

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13), க்ரோஸி தெரிவித்ததாவது...

"ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நடான்ஸின் மேல் பகுதிக்கும் தான் பாதிப்பு. நிலத்தடியில் இருக்கும் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், வான்வெளி தாக்குதலினால், அந்தப் பகுதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரத் தடையினால் அணு சக்தி கசிய வாய்ப்புள்ளது.

இந்த சென்ட்ரிஃபியூஜ்களில் இருப்பது யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு. இது யுரேனியம் மற்றும் ஃப்ளோரினை இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கசிந்தால் தோல் எரிச்சல் ஏற்படும். மேலும், இந்த வாயுவை சுவாசித்தால் இறப்பு ஏற்படக் கூட வாய்ப்பு உண்டு.

இந்தக் கசிவினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று இப்போதைக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் கணிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார்.

"நீங்கதான் பெஸ்ட்; உங்களைப் போல நானும்..." - இணையத்தில் வைரலாகும் மோடி, மெலோனி உரையாடல் வீடியோ

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர சந்திப்பான G7 உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நேற்று முன்தினம் (ஜூன் 16... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க