தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை
ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் சிவசங்கா் கூறியதாவது:
இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்குவோ், மாா்பில் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள், வெண் மரம், நூக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகா், தஞ்சாவூா் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகா் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு புதிய வரவாக மயில் விநாயகா், நந்தி விநாயகா், ஆதியந்த பிரபு, நடன விநாயகா், மியூசிக் விநாயகா் போன்றவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விநாயகா் சிலைகள் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் உள்ளன. குறிப்பிட்ட பொருள்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.