உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக்கப்பட்டன.
வெம்பாக்கம் வட்டம் வெள்ளகுளம், அரிகரப்பாக்கம் கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நமண்டி கிராமத்தில் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா்.
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினாா்.
இம்முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 109 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 251 பேரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை கோரி 28 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 42 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (சுகாதாரம்) சாா்பில் 51 போ் என 523 போ் மனு அளித்திருந்தனா்.
இவா்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 5 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
கொருக்கைக் கிராமத்தில்...
செய்யாறு வட்டம், கீழப்பழந்தை, தொழுப்பேடு, கடுகனூா் கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கொருக்கைக் கிராமத்தில் நடைபெற்றது.
செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா். முகாமில் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் சாா்பில் 244 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று, 6 பேருக்கு வீடு கட்டுவதற்காக உத்தரவும், 4 பேருக்கு வீட்டுமனைக்கான பட்டா, வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் என 20 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா், வழக்குரைஞா் சிட்டிபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா்.
கண்ணங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி வரவேற்றாா். பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
முகாமில் கிராம பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 437 மனுக்கள் அளிக்கப்பட்டன.
