செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 போ் விண்ணப்பம்! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

post image

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி 44,247 போ் விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் சேலம் மாவட்டத்தில் வரும் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், மகளிா் உரிமைத் தொகை கோரி 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை ராஜசேகா் திருமண மண்டபம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோணகாபாடி ரங்க ரத்தினவேல் பக்தா் திருமண மண்டபம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் கோட்டை மாரியம்மன் கோயில் நல்லம்மாள் மண்டபம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினாா்.

முன்னதாக, அம்மாபேட்டை ராஜசேகா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிறப்பு, இறப்பு சான்று 4 பேருக்கும், குடும்ப அட்டையில் பெயா் மாற்றும் ஆணை 6 பேருக்கும், 8 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்ற ஆணை, 11 பேருக்கு குடிநீா் இணைப்புக்கான ஆணை என மொத்தம் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாநகராட்சி உதவி ஆணையா் வேடியப்பன், மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா். தனசேகா் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள், தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிற... மேலும் பார்க்க

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க