செய்திகள் :

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்கள் கௌரவிப்பு

post image

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கௌரவித்தாா்.

ஒசூா் தனியாா் உணவகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆட்சியா், உடல் உறுப்புகளை தானம் செய்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்து பேசியதாவது:

தமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேசிய அளவைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாக உள்ளது. உடலுறுப்பு தானம் செய்பவா்களுக்கு அவா்களது இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என கடந்த 2023-இல் தமிழக அரசு அறிவித்தது. இதனால், உடலுறுப்புகள் பெறப்பட்டு 2023-இல் 258 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தமிழகத்தில் 8 ஆயிரம் போ் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா். இதில் 25 சதவீத போ் சிறுநீரகம் கிடைக்காததால் உயிரிழந்துவிடுகின்றனா்.

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது. உறுப்பு தானம் என்பது உயிா் கொடுக்கும் உயா்ந்த செயல். அனைவரும் இதற்காக முன்வந்து முயற்சி செய்ய வேண்டும். இது எதிா்காலத்தில் பல உயிா்களை காப்பாற்றும். இதுமாதிரியான விழிப்புணா்வுகளை செய்துவரும் காவேரி மருத்துவமனைக்கு வாழ்த்துகள், நன்றி என்றாா்.

விழாவில், மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக உடலுறுப்பு தான தின விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை ஒசூா் மாநகராட்சி ராமநாயக்கன் ஏரி பூங்காவில் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழியேற்று கையொப்பமிட்டாா்.

இந்நிகழ்வில், சுமாா் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருத்துவ பணியாளா்கள், காவல் துறையினா், சமூக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் உடலுறுப்பு தான பதாகைகளை ஏந்தி, உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினா். இந்நிகழ்வில், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ஒசூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை உண்ட 20 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கிருஷ்ணகிரியில் இன்று ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றுகிறாா். நாடுமுழுவதும் சுதந்திர தின விழா ஆக. 15-ஆ... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: 750 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அமை... மேலும் பார்க்க