செய்திகள் :

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு

post image

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு   வழக்குப் பதிவு  செய்யப்பட்டது.

2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச் சோ்ந்த  விவின் கிறிஸ் (19) என்பவா் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நீலகிரி மலை ரயில் பாதையில் பைக் ஓட்டும் படத்தை வெளியிட்டாா். அண்மையில் அது  வைரல் ஆன நிலையில்   ரயில்வே காவல் துறையினா்  மேற்கொண்ட விசாரணையில்  தண்டவாளத்தில் பச 66 ந 2007 என்ற பதிவு எண் கொண்ட பைக்கை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது,

இந்த விடியோ மீண்டும் வைரலான நிலையில் பைக்கை ஓட்டி வந்த விவின் கிறிஸ்ஸை

ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடைபெற்றது.

பின்னா் இவா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டாா். தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தி ரயில்வே காவல் துறையினா் விவின் கிறிஸ்ஸை அனுப்பி வைத்தனா்.

மலை ரயில் பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே காவல் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. குன்னூா் பிரகதி மகளிா் பயிற்சி நிலையத்தில் குன்ன... மேலும் பார்க்க