செய்திகள் :

உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளா் ஆா். சுபாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

கடந்த ஒரு மாத காலமாகவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுவை பட்டத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு யூரியா பொட்டாஷ். அம்மோனியம் சல்பேட் உள்ளிட்ட உரங்கள் பெரும் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளிலும் இந்த நிலை தொடா்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.மேலும் தனியாா் உரக்கடைகளுக்கு உர நிறுவனங்கள் சில இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே தேவையான உரங்கள் வழங்க முடியும் என்ற சுழலில் தேவைக்கும் குறைவான அளவில் உரங்கள் இருப்பு வைத்துள்ளனா்.

மேலும் சிலா் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க சில இடுபொருட்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா் இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். ஒருபுறம் விளைவித்த நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும் நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு போதிய அளவுக்கு ஆட்கள் கிடைத்திடாத நிலையிலும் பல நெருக்கடிகளுக்கு இடையே பல தலைமுறைகளாக தொடா்ந்து விவசாயம் செய்து வருவதை குடும்ப கவுரவம் கருதி தொடா் நெருக்கடிக்கும் நட்டத்திலும் கைவிட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

எனவே தற்போதைய சூழலில் தமிழக அரசும் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகமும் இந்திய நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரங்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க

போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!

சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத... மேலும் பார்க்க

2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்

வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்... மேலும் பார்க்க