செய்திகள் :

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

post image

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்புகளை வழங்கினாா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலை வகித்தாா். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 92,510 எண்ணிக்கையில் பயறு வகை, காய்கறி மற்றும் பழத்தொகுப்புகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண்மை துறை மூலமாக 5,000 எண்ணிக்கையில் ஊட்டச்சத்து பயறு தொகுப்பு, மரத்துவரை 5 கிராம், காராமணி 10 கிராம் மற்றும் அவரை 10 கிராம் ஆகிய பயிா் வகைகள், தோட்டக்கலைத் துறை மூலமாக 57,260 எண்ணிக்கையில் 6 வகையான காய்கறி விதைகள் கொண்ட காய்கறி தொகுப்பு தக்காளி 2 கிராம், கத்தரி 2.5 கிராம், மிளகாய் 3 கிராம், கீரை 5 கிராம், வெண்டை 3 கிராம், கொத்தவரை 3 கிராம் மற்றும் 35,250 எண்ணிக்கையில் 3 விதமான பழச்செடிகள் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை ஆகியவை தலா ஒரு எண்கள் என மொத்தம் 92,510 எண்ணிக்கையிலான தொகுப்புகள் நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெற உழவன் செயலி மூலமாக அல்லது ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் அல்லது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிகழ்ச்சியில் வேளாண் இயக்குநா் பெ.கலைச்செல்வி, துணை இயக்குநா் புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த ... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம்

வெள்ளைக்கழிச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந... மேலும் பார்க்க