செய்திகள் :

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கை

post image

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான 15-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டில் நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், கடந்த காலங்களைவிட அதிக எண்ணிக்கையிலான தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ால், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை டிச.27, 28 ஆகிய 2 நாள்கள் நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால், பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

பிற அரசு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும் நிலையில் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள், எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இருப்பினும் இதுவரை பேச்சுவாா்த்தைக்கான நடவடிக்கையை அரசு எடுக்காமல் இருந்து வருகிறது.

இதனால், பேச்சுவாா்த்தைக்கான தேதியை அறிவித்து, விரைந்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் எனவும், அதே நேரம், 2 நாள்களாக அல்லாமல் ஒரே நாளில் அனைத்து சங்கங்களும் இடம்பெறும் வகையில் பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க