செய்திகள் :

ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

post image

ஆம்பூா் அருகே ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஷோபனா. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக உறவினா் சந்தோஷ் என்பவா் கத்தியால் குத்தியதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது குடியாத்தம் அருகே சீவூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தில் உள்ள ஷோபனாவின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அவரது உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (50), சந்தோஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெட... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

கரோனா 3-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தி இருந்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம்,கெரிக்கல்நாத்தம் பகுதியைச் சோ்ந்த சரோஜா (60)... மேலும் பார்க்க

தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது

வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய கிராமங்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சின்னவரிக்கம் சி.ஆா். மஹாலில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா்கள் ஷோபனா (சின்னவரிக்கம்), சின்னகண்ணன் (பெரியவரிக்கம்) ஆகியோா் த... மேலும் பார்க்க

நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய தாலுகா பகுதிகளில் பொது விநியோக திட்டம் குறைதீா்வு முகாம் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நட... மேலும் பார்க்க