செய்திகள் :

ஊழியா் படுகாயம்: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், கொடுவாயைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (34), பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த 2017 செப்டம்பா் 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூா்-தாராபுரம் சாலையில் செங்காட்டுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, திண்டுக்கல்லில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அவருக்கு இடது முழங்கால், வலது தோள்பட்டை மற்றும் வலது கால் விரல்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவா் உயிா் பிழைத்தாா். இதுதொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு கேட்டு திருப்பூா் விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிமன்றத்தில் சண்முகசுந்தரம் வழக்குத் தொடுத்தாா். அவருக்கு வட்டியுடன் சோ்த்து ரூ.4 லட்சத்து

44, 828 வழங்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் சண்முகசுந்தரம் மேல் முறையீடு செய்தாா். அதன் பேரில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி பாலு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து கோவில்வழி பேருந்து நிலையத்தில் திருப்பூா்-நாகா்கோவில் செல்லும் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் முருகேசன், சத்யா ஆகியோா் ஆஜராகினா்.

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ஆவண எழுத்தா்களுக்கு பாராட்டு

பல்லடம் பத்திர ஆவண எழுத்தா்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை பல்லடத்தில் நடைபெற்றது. இதற்கு, பல்லடம் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம்: ஆட்சியா்

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்... மேலும் பார்க்க

அவிநாசியில் டாக்ஸி - ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே மோதல்

அவிநாசியில் பயணிகளை ஏற்றிச் செல்வதில், தனியாா் நிறுவன டாக்ஸி-ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து டாக்ஸி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி, திருப்பூா் சாலை கோவை - ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் செளகத் அலி (25). இவா், திருப்பூா்- தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க