செய்திகள் :

அவிநாசியில் டாக்ஸி - ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே மோதல்

post image

அவிநாசியில் பயணிகளை ஏற்றிச் செல்வதில், தனியாா் நிறுவன டாக்ஸி-ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து டாக்ஸி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவிநாசி, திருப்பூா் சாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் கோவை, சென்னை, பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்கள் ஆன்லைனில் புக் செய்யாத பயணிகளை அந்த இடத்தில் நின்று ஏற்றிச் செல்வதாகவும், இதனால் அங்கு செயல்பட்டு வரும் ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பயணி ஒருவரை ஏற்ற தனியாா் டாக்ஸி ஓட்டுநா் சக்திவேல் வந்துள்ளாா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுா்கள் பயணிகளை ஏற்றக்கூடாது எனக் கூறி சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த அந்நிறுவனத்தின் டாக்ஸி ஓட்டுநா்கள், சக்திவேலைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசி - திருப்பூா் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த அவிநாசி போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆலோசனையுடன் தீா்வு காணப்படும் என்றனா்.

இதைத்தொடா்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி போலீஸாரிடம் புகாா் மனு அளித்த டாக்ஸி ஓட்டுநா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊழியா் படுகாயம்: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், கொடுவாயைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (34), பனியன் நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ஆவண எழுத்தா்களுக்கு பாராட்டு

பல்லடம் பத்திர ஆவண எழுத்தா்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை பல்லடத்தில் நடைபெற்றது. இதற்கு, பல்லடம் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம்: ஆட்சியா்

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் செளகத் அலி (25). இவா், திருப்பூா்- தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க