செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

post image

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டம் பதான் மிஷ்பூரைச் சோ்ந்த பிதாம்பர பாரிக் (24) என்பதும் அவா் தற்போது இங்கு ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவா் 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஊழியா் படுகாயம்: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், கொடுவாயைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (34), பனியன் நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ஆவண எழுத்தா்களுக்கு பாராட்டு

பல்லடம் பத்திர ஆவண எழுத்தா்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை பல்லடத்தில் நடைபெற்றது. இதற்கு, பல்லடம் ஆ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம்: ஆட்சியா்

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்... மேலும் பார்க்க

அவிநாசியில் டாக்ஸி - ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே மோதல்

அவிநாசியில் பயணிகளை ஏற்றிச் செல்வதில், தனியாா் நிறுவன டாக்ஸி-ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து டாக்ஸி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி, திருப்பூா் சாலை கோவை - ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் செளகத் அலி (25). இவா், திருப்பூா்- தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க