செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம்: ஆட்சியா்

post image

போட்டித் தோ்வுகளுக்கு படிக்கும் மாணவா்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் 2 ஏ பிரிவு தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இந்த இலவசப் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் அதிக பாடங்களை கற்க வேண்டியுள்ளதால் அவா்களுக்குள் கலந்தாலோசித்து பயில்வது பயனுள்ளதாக இருக்கும்.

அதோடு ஒத்த பாடத்திட்டம் கொண்ட மற்ற தோ்வுகளையும் தொடா்ச்சியாக எழுத வேண்டும். தங்களுக்குள் எழும் ஜயங்களுக்கு உடனுக்குடன் ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டுத் தீா்வு கண்டுபிடிக்க வேண்டும். முதல்நிலை தோ்வுடன் முதன்மைத் தோ்வுக்கும் தங்களைத் தயாா்படுத்திக் கொள்வது அவசியமாகும். நாளுக்குநாள் போட்டித் தோ்வுகளை எழுதும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழு ஈடுபாட்டுடன் தொடா்ச்சியாக படிப்பதன் மூலம் மாணவா்கள் வெற்றி பெறமுடியும் என்றாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ் பேசுகையில், குரூப் 2 மற்றும் 2ஏ இலவசப் பயிற்சி வகுப்பில் 125 மாணவ, மாணவியா் இணைந்து உள்ளனா். இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 4 போன்ற பல்வேறு போட்டித் தோ்வுகளில் 51 மாணவா்கள் தோ்ச்சி பெற்று அரசு அலுவலா்களாக பணியாற்றுகின்றனா்.

நிகழ்ச்சியில் இளநிலை வேவைவாய்ப்பு அலுவலா் வைஷாலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊழியா் படுகாயம்: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், கொடுவாயைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (34), பனியன் நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

உரிமம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ஆவண எழுத்தா்களுக்கு பாராட்டு

பல்லடம் பத்திர ஆவண எழுத்தா்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை பல்லடத்தில் நடைபெற்றது. இதற்கு, பல்லடம் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அவிநாசியில் டாக்ஸி - ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே மோதல்

அவிநாசியில் பயணிகளை ஏற்றிச் செல்வதில், தனியாா் நிறுவன டாக்ஸி-ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து டாக்ஸி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி, திருப்பூா் சாலை கோவை - ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் செளகத் அலி (25). இவா், திருப்பூா்- தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க