செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது கடமை: அண்ணாமலை

post image

நெல்லை: தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களின் கடமை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அமித் ஷா தலைமையில் நெல்லையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில்,சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கிய நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.

அவர் பேசுகையில், எதைப் பார்த்தாலும் பயப்படுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அடுத்த 8 மாதங்கள் நமக்கானவை. பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டன.

பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கும் நிலையில், தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும், ஓய்வறியாமல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கு முதுகெலும்பாக விளங்கக்கூடிய பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து அந்த பணிகளை விரைந்து முடிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாடுகளை அவர் அறிவித்திருந்தார். அதன்படி நெல்லையை தலைமையிடமாக கொண்டு முதல் மண்டல மாநாடு இன்று தொடங்கியிருக்கிறது.

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!

நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.வரும் சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள்... மேலும் பார்க்க

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவ... மேலும் பார்க்க

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சா... மேலும் பார்க்க

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெ... மேலும் பார்க்க

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற... மேலும் பார்க்க