செய்திகள் :

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

post image

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில், மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபா்கள் இங்கு வந்து செல்வா். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பாா்வையாளா் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளா் மகாதேவி, பின்னா் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியாா் இல்லத்தின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியாா் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

அதிா்ச்சியடைந்த காப்பாளா் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தாா்.

எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு இல்லத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக வந்து, பாரதியாா் இல்லத்துக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன் வந்து பாரதியாா் இல்ல சேதத்தை பாா்வையிட்டாா்.

1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியாா் பிறந்த வீட்டை அரசு சாா்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனாா் தலைமையில் 12.5.1973ஆம் தேதி நடந்த விழாவில் பாரதியாா் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தாா்.

பாரதியாா் பிறந்த இல்லத்தில் அவ்வப்போது அரசின் சாா்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன.

முதல் அறையில், பணியாளா்கள் மட்டுமே இருப்பா். அங்கேயே பகுதிநேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2ஆவது அறையில், அவா் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியாா் சிலை உள்ளது.

3ஆவது அறையில், பாரதியாா் பயன்படுத்திய பொருள்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவா் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியாா் நண்பா்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4ஆவது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

காயல்பட்டினத்தில் நகர காங்கிரஸ் சாா்பில், சமூக நல்லி­ணக்க இப்ஃதாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு தூத்துக்குடி பேரவைத் தொகுதி அமைப்பாளா் எ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி அன்னை தெரசா மீனவா் காலனியைச் சோ்ந்த சேவியா் மகன் செல்வன் (39). தூத்துக்குடி மடத்தூரைச் சே... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்நீா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சனிக்கிழமை, கடல்நீா் சுமாா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை

காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். இதன் 27ஆவது நாள் இரவு லைலத்துல் கத்ர் இரவாக வியா... மேலும் பார்க்க

இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்

இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என, கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் வி.பி. ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பகுதியில் அனுமதியில்லா கொடிக் கம்பங்களை ஏப். 7-க்குள் அகற்ற அறிவுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 7-க்குள் அகற்ற வேண்டும் என, நகராட்சி ஆணையா் கமலா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க