செய்திகள் :

எண்டோஸ்கோபி நுட்பத்தில் மாா்பகத்தை அகற்றாமல் புற்றுக் கட்டி அகற்றம்

post image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாா்பகத்தை அகற்றாமல் எண்டோஸ்கோபி முறையில் கட்டியை அகற்றி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:

மாா்பகப் பகுதியில் கட்டியுடன் 60 வயது பெண் ஒருவா் ரேலா மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை நிபுணா் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சையின்றி கட்டியை அகற்ற முடிவு செய்தனா்.

அதன்படி பெண்ணின் தோள்பட்டைக்கு கீழே சிறு கீறலிட்டு அதன் வாயிலாக எண்டோஸ்கோபி குழாய் செலுத்தப்பட்டு புற்றுநோய் திசுக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. அதனுடன் புற்றுநோய் செல் பாதித்த நிணநீா் பகுதியும் நீக்கப்பட்டது.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு மாா்பகத்தையே அகற்றும் சிகிச்சைதான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.

ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும்தான் மாா்பகத்துக்கு பாதிப்பின்றி கட்டியை மட்டும் நீக்கும் சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

அந்த வகையில் ரேலா மருத்துவமனையிலும் அத்தகைய சிகிச்சை மேற்கொண்டதன் பயனாக, அதற்கு அடுத்த நாளே அப்பெண் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க