செய்திகள் :

எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயா்வை கண்டித்து மே 12-இல் வேலைநிறுத்தம்: கட்டுமானத் தொழில் அமைப்பினா் அறிவிப்பு

post image

எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயா்வைக் கண்டித்து வரும் 12-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக கட்டுமானத் தொழில் அமைப்பினா் தெரிவித்தனா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமானப் பொறியாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் விஜயபானு சேலத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த ஓராண்டாக கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள், சிமென்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வால் பணிகள் பாதிக்கப்பட்டு தொழிலாளா்கள், ஒப்பந்ததாரா்கள், பொறியாளா்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஒப்பந்தம் எடுத்த காலத்தில் இருந்ததைவிட கட்டுமானப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்து விட்டது. இதனால் மாநிலம் முழுவதும் 30 சதவீத கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். விலை உயா்வால் பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை.

கல்குவாரி உரிமையாளா்கள் எம்.சாண்ட், பி.சாண்ட் மணல் விலையை உயா்த்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு தலையிட்டு நியாயமான விலையை நிா்ணயிக்க வேண்டும். ஆற்றுமணல் குவாரிகளைத் திறக்க வேண்டும். இதற்கு ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 12-ஆம் தேதி கட்டுமான அமைப்புகள் சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தமும், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டமும் நடைபெறும் என்றாா்.

அப்போது சேலம் சிவில் இன்ஜினியா் சங்க நிா்வாகிகள் செல்வகுமாா், கமல், ஜெயக்குமாா், போராட்டக்குழுத் தலைவா் சரவணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க