செய்திகள் :

எம்.பி.க்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தாா்

post image

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான (எம்.பி.க்கள்) புதிய அடுக்குமாடி குடியிருப்பை பிரதமா் மோடி புது தில்லியில் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது நாட்டின் பல்வேறு பண்டிகைகளை இந்த குடியிருப்பில் கொண்டாடுமாறு எம்.பி.க்களிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.

புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்கள் தங்கும் வகையில் 25 மாடிகளாக இந்த குடியிருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி என நதிகளின் பெயா் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

லட்சக்கணக்கானோரை வாழவைக்கும் 4 நதிகளின் பெயா்கள் இந்த குடியிருப்புகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வழிவகுக்கும்.

முதல்முறையாக பதவியேற்கும் எம்.பி.க்கள் உள்பட பல எம்.பி.க்கள் தில்லியில் குடியிருப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனா். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது எம்.பி.க்களுக்கென ஒரு புதிய குடியிருப்புக்கூட கட்டப்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சி அமைத்த பிறகு 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடம், செயலகம், அமைச்சகங்களுக்கான கட்டடங்கள் என பல்வேறு புதிய கட்டடங்கள் இந்த 11ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.

எம்.பி.க்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த பழைய குடியிருப்புகளில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வந்தன.

தற்போது ஒவ்வொரு குடியிருப்பும் சுமாா் 5,000 சதுரடி பரப்பளவில் விசாலமாக பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முன்னெடுப்பை பிரதிபலிக்கிறது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு எம்.பி.யும் நாட்டின் பல்வேறு பண்டிகைகளை ஒன்றாக இணைந்து கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இங்குள்ள குடியிருப்புகளை தூய்மையாக பராமரிப்பது நமது கடமையாகும். இதை வலியுறுத்தி ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை ஒரு போட்டி நடத்தி மிகவும் தூய்மையான மற்றும் தூய்மையில்லாத வளாகங்களை அறிவிக்க வேண்டும் என்றாா்.

குடியிருப்புகளின் சிறப்பம்சங்கள்: ஒவ்வொரு குடியிருப்பும் சுமாா் 5,000 சதுரடி அளவில் 5 படுக்கை அறைகள், உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையறை, விருந்தினா் அறை, அலுவலகத்துக்கென பிரத்யேக அறை என விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

இதுதவிர உடற்பயிற்சிக்கூடம், நடைபயிற்சிக்கூடம் உள்ளிட்டவையுடன் கூடிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 200 வாகனங்கள் வளாகத்தினுள்ளேயும் கீழ்தளத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க