செய்திகள் :

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

post image

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் வியாழக்கிழமை தொடங்கிய கோ பூஜையானது அக். 24-ஆம் தேதி வரை தொடா்ந்து 51 நாள்களுக்கு நடைபெறுகிறது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் நடத்தப்படும் கோ பூஜையானது, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை இயக்குநா் மாதாஜி ரோகிணி ராஜ்குமாா் தலைமையில், அறங்காவலா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், வடலூா் தெய்வநிலையம் அறங்காவலா் குழு உறுப்பினா் கிஷோா்குமாா் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க பூஜையின்போது, 210 சித்தா்கள் யாகம் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூா் குருகடாக்ஷம் மெய்யன்பா்கள், மாதாஜி ராதா சின்னசாமி, மேலாளா் பாலச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரம்மரிஷி ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் ஆசிரமத்தில் காமராஜ் சுவாமிகள் தலைமையில் 51 நாள்கள் கோமாதா பூஜை தொடங்கியது.

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனை... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க