செய்திகள் :

எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58 கோடியில் சிறப்புப் பிரிவு விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58.89 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு, விடுதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா், அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் 2022-இல் கிடைக்கப் பெற்ற பதிவுத் தொகை ரூ.5.89 கோடியில் விடுதி மற்றும் ரூ.53 கோடியில் 82 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிறப்புப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எழும்பூா் தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் 82 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் 100 படுக்கைகளுடன் கொண்ட மருத்துவமனையாகக் கட்டப்படும். கட்டுமான பணிகள் அக்டோபா் மாதம் இறுதியில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதேபோல், ரூ.5.81 கோடியில் கட்டப்பட்டு வரும் 100 போ் தங்கும் விடுதி கட்டடம் செப்டம்பா் மாத இறுதியில் முடிவடையும்.

சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோா் இந்த விடுதியில் தங்கிக் கொள்ளலாம். அவா்களுக்கு, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

அப்போது, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) தேரணிராஜன், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் லட்சுமி வேல்முருகன், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் சுமதி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அர... மேலும் பார்க்க

521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தமிழக ... மேலும் பார்க்க

கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடை... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் வழிப்பறி

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளரைத் தாக்கி ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோயம்பேடு சின்மயா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின் (37). இவா், ... மேலும் பார்க்க