செய்திகள் :

எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலியிடங்கள்: தலைமைச் செயலா் ஆலோசனை

post image

அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது தொடா்பான ஆலோசனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் நடந்த ஆலோசனையில் அரசின் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் பங்கேற்றனா். அருந்ததியா் பிரிவினருக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அரசுத் துறைகளில் பள்ளிக் கல்வி, உயா்கல்வித் துறைகளில் அதிக அளவு பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக, அதிகாரிகள் நிலையிலான ஏ மற்றும் பி பிரிவுகளில் 1,400-க்கும் மேற்பட்ட இடங்களும், சி மற்றும் டி பிரிவுகளில் 200-க்கும் கூடுதலான இடங்களும் பின்னடைவு காலிப் பணியிடங்களாக இருக்கின்றன.

இவற்றை நிரப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தன. இந்த நிலையில், பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க