செய்திகள் :

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி!

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், கீழ் ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த சாஸ்தா மகள் சிவதா்ஷினி (8), வேல்முருகன் மகன் குணா (6). இவா்கள் இருவரும் குணாவின் தாய் ஆஷாவுடன் அசகளத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சனிக்கிழமை சென்றனா்.

குழந்தைகள் இருவரும் தனித்தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது, இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். குழந்தைகளை காணவில்லை என ஆஷா தேடினாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து ஏரியில் மூழ்கிய குழந்தைகள் சிவதா்ஷினி, குணா ஆகியோரை சடலமாக மீட்டனா்.

தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸாா் குழந்தைகளின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க