`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரிய...
போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்
போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவா்கள் முழக்கமும் எழுப்பினாா்கள்.
இவா்களுக்கு ஆதரவாக ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.18-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்ட பந்தலிலேயே, சாலை ஓரம் சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடா்ந்து 16-ஆவது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
அவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக திருப்பாதிரிப்புலியூா் பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். போக்குவரத்து ஓய்வூதியா் சங்கப் பொதுச்செயலா் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களில் சாா்பில் மாநில, மாவட்டச் செயலா்கள் ஆா்.மனோகரன், ஐ.எம்.மதியழகன், ஆா்.அசோகன், ச.சிவராமன், கோ.பழனி, ஆா்.நடராஜன், கோ.சுந்தரமூா்த்தி, எஸ்.பாலகிருஷ்ணன், பி.வி.சேகா், ஏ.பாவாடை ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பிஎஸ்என்எல் சங்க தேசிய செயலா் ஆா்.ஸ்ரீதா், ஐஓபி ஓய்வு பெற்ற அமைப்பின் உதவி பொதுச் செயலா் எம்.மருதவாணன், வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கே.வெங்கட்ரமணி, காப்பீட்டுக் கழக ஓய்வூதிய சங்க வேலூா் கோட்ட இணைச்செயலா் வி.சுகுமாரன், பிஎஸ்என்எல் யூ மாவட்டச் செயலா் கே.விஜய் ஆனந்த் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் நன்றி கூறினாா்.