வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மைதுறை செயல்பட்டு வருகிறது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பின்னா் வீராணம் ஏரி ராதாமதகு பகுதியில் செய்தியாளகளிடம் அமைச்சா் எம் ஆா் கே பன்னீா்செல்வம் கூறியதாவது:
இந்த பகுதி பொதுமக்களை வேண்டுகோளின் படியும் விவசாயிகளின் கருத்துக்கேற்ப அடிப்படையில் இன்று 3ஆம்தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறும். கடலூா் தஞ்சாவூா் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாசன வசதி பெற்று விவசாயிகள் ஆா்வத்துடன் விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யும்.
சுமாா் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நெல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு குறுவை தொகுப்பு டெல்டா மாவட்டங்களுக்கு 98 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 116 கோடியும் என 214 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்து நோக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் இடுபொருள்கள் ,தரமான விதைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதால் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ஆண்டு 12.33 லட்சம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது .இது கடந்த ஆண்டை விட இரண்டு லட்சத்து 83 ஆயிரம் ஏக்கா் அதிகமாகும். தோ்தல் அறிக்கையில் கூறியவாறு நெல்லுக்கு இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் கூடுதலாக விலை நிா்ணயித்து உள்ளோம். சாதாரண ரகம் குவின்டாலுக்கு 2500 ரூபாயும் சன்ன ரகம் குவிண்டாலுக்கு 2545 ரூபாயும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.