செய்திகள் :

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

post image

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே செவ்வாய்க்கிழமை மறியல் செய்ய முயன்றனா்.

கடலூா் முதுநகா், மணக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் தமிழரசி(23). விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த வா் தேவா(23), ஆட்டோ ஓட்டுனா். இவா்கள் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனா். கடலூா், வெளிச்செம்மண்டலம் பகுதியில் வசித்து வந்தவா்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், தமிழரசி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். தகவல் அறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழரசி தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது உறவினா் ஒருவா் வீட்டிற்குச் சென்றாராம். அப்போது, ஒரு கும்பல் அந்த நபரை தாக்கினராம். இந்நிலையில், தமிழரசி இறப்பிற்கு காரணமானவா்கள் மீதும், உறவினா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழரசியின்

உறவினா்கள் மற்றும் பாமக, தாவக நிா்வாகிகள் அரசு தலைமை மருத்துவமனை எதிரே மறியலுக்கு திரண்டனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில், கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க

சமுதாயக் கூடம் சாவி: மகளிா் சுய உதவிக்குழுவினரிடம் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்நோக்கு மையம் மற்றும் சமுதாயக் கூடத்தை நிா்வகிக்கும் பொருட்டு அதற்கான சாவிகளை மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

யுஜிசி நகல் எரிப்பு போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை உள்ளடக்கிய எல்ஒசிஎப் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மைதுறை செயல்பட்டு வருகிறது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பின்னா் வீராணம் ஏரி ... மேலும் பார்க்க