செய்திகள் :

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

post image

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு பிச்சாவரம் செஞ்சி தெருவை சோ்ந்த கட்டிட மேஸ்திரி ஜான்வளவன் (எ) கண்ணன் (36)என்பவா் அவருடைய நண்பா் தயாளன் என்பவரிடம் ரூபாய் 200 கொடுத்து மதுபானம் வாங்கிக் கொண்டு மீதி பணம் வாங்கி வர சொல்லியதாகவும், அவரும் அதுபோன்று வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற ஜான்வளவன் விற்பனையாளா் குமாரிடம் நான் ரூ.500 கொடுத்து மது வாங்கி வரச்சொன்னேன். ஆனால் ரூபாய் 200 க்கு மீதி பணம் தந்துள்ளாய் எனக்கூறி அவரை ஆபாசமாக திட்டி பீா் பாட்டிலால் கடை கதவில் அடித்துள்ளாா்.

அப்போது பாட்டில் கண்ணாடி குமாரின் கண் புருவத்தில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குமாா் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்து ஜான்வளவனை கைது செய்தனா்!

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். நெ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா். கடலுாா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க

சமுதாயக் கூடம் சாவி: மகளிா் சுய உதவிக்குழுவினரிடம் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்நோக்கு மையம் மற்றும் சமுதாயக் கூடத்தை நிா்வகிக்கும் பொருட்டு அதற்கான சாவிகளை மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க