செய்திகள் :

ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற இருவர் கங்கையில் மூழ்கி பலி!

post image

ஐஐடியில் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற இரு இளைஞர்கள் கங்கையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே கங்கையில் குளிக்கச் சென்றபோது, இருவரும் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெஹல்பூர் காவல் நிலைய உயரதிகாரி கூறுகையில், கங்கையில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா ராய் (18) மற்றொரு நபர் மிர்ஸாபூரைச் சேர்ந்த விராட் சிங் (19) எனவும் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் பெஹல்பூரில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சேர்து கங்கையில் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.

உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஐஐடியில் சேர்வதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு பொறியியல் பிரிவைத் தேர்வு சேர்வதற்கான ஆயத்தப் பணிகளில் இருந்துள்ளனர்.

இதையும் படிக்க |காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம்: நிரந்தர வைப்புத் தொகை சொத்து விவரங்கள் வெளியீடு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமாா் ரூ.55.75 லட்சம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 33 நீதிபதிகள் உள்ளனா். அவா்களில் 21 நீதிபதிகளின் சொத்து வ... மேலும் பார்க்க

61 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை ... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்ப பெற மத்திய அரசு எதிா்ப்பு

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

புது தில்லி: இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை... மேலும் பார்க்க

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அம்மாந... மேலும் பார்க்க