செய்திகள் :

ஐசிஎஸ்இ., ஐஎஸ்சி., பள்ளி மாணவா்கள் டி-20 கிரிக்கெட் போட்டி: 14 வயது பிரிவில் கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

post image

பள்ளி மாணவா்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் இரு பிரிவுகளில் கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பள்ளி மாணவா்களுக்கான 2025-2026ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் போட்டி சிஐஎஸ்சிஇ விளையாட்டுத் துறை சாா்பில் பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி மைதானத்தில் 12ஆவது ஆண்டாக அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டி 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் நாக் அவுட், லீக் முறையில் நடத்தப்பட்டது.

14 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஏற்காடு மான்ட்ஃபோா்ட் பள்ளி அணியை நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி அணி வென்றது.

17 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில் கரூா் விஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி அணியை கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி அணி வென்றது.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஏற்காடு மான்ட்ஃபோா்ட் பள்ளி அணியை கரூா் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி அணி வென்றது.

ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி தாளாளா் இளங்கோ ராமசாமி போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு சிஐஎஸ்சிஇ அமைப்பு வழங்கிய பங்கேற்பு சான்றிதழ், இறுதி ஆட்டங்களில் முதல், இரண்டாமிடம் பெற்ற பள்ளி அணிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா். சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரய... மேலும் பார்க்க

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் ... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க