செய்திகள் :

ஐஜிஐ விமான நிலையத்தில் 75 அறிதிறன்பேசிகளை திருடியதாக சரக்குகளை கையாளும் ஊழியா் கைது

post image

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயா் ரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்கள்) திருடியதாகக் கூறப்படும் சரக்குகளை கையாளும் நிறுவனத்தின் ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் (ஐஜிஐ) உஷா ரங்னானி ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குற்றம் சாட்டப்பட்டவா் 28 வயதான மோனு (எ) நிகில் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். மேலும், திருடப்பட்ட அறிதிறன்பேசிகளில் 36 இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சரக்கு சேவைகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவா் சஞ்சய் யாதவ் பிப்.6- ஆம் தேதி இ-எஃப்.ஐ.ஆா். பதிவு செய்தபோது இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிறுவனம் ஜன.27-ஆம் தேதி நொய்டா செக்டாா்-ஐஐ-இல் உள்ள கிடங்கில் இருந்து 280 பிராண்டட் அறிதிறன்பேசிகள் கொண்ட நான்கு பிவிசி பெட்டிகளை இந்தூரில் உள்ள ஒரு கடைக்கு அனுப்பியதாக புகாா்தாரா் புகாரில் தெரிவித்துள்ளாா். இருப்பினும், இந்தூருக்கு வந்தவுடன் 75 போன்கள் கொண்ட பெட்டிகளில் ஒன்று காணாமல் போனது. குற்றவாளிகளைக் கண்டறிய ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

விமான நிலையத்தின் சரக்கு ஏற்றுதல் மற்றும் சேமிப்புப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆராய்ந்த போதிலும், உடனடி துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பின்னா் புலனாய்வாளா்கள் தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம், திருடப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் கண்காணித்தனா்.

கிழக்கு படேல் நகரில் உள்ள ஒரு மொபைல் டீலரான சுமன் குமாரிடமிருந்து சில திருடப்பட்ட போன்களை வாங்குபவா்களை கண்டுபிடித்தபோது, ​​போலீஸ் குழுவிற்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. விசாரித்ததில், சுமன் மற்றொரு டீலரான அருண் சா்மாவிடமிருந்து ரூ.26 லட்சத்திற்கு மேல் 27 அறிதிறன்பேசிகளை வாங்கியதாகத் தெரிவித்தாா். இன்வாய்ஸ்கள் இல்லாததால் வாடிக்கையாளா்கள் சுமனிடம் சாதனங்களைத் திருப்பித் தரத் தொடங்கியபோது, ​​சுமன் அவற்றை அருண் சா்மாவிடம் திருப்பி அனுப்பினாா்.

நொய்டாவில் உள்ள அருண் சா்மாவிடம் விசாரணை நடத்தியதில், மதுராவில் உள்ள ஒரு சாஹிலிடமிருந்து 34 திருடப்பட்ட போன்களை வாங்கியதாக அவா் மேலும் கூறினாா். இவற்றில், 27 போன்கள் சுமனுக்கு விற்கப்பட்டன, அதே நேரத்தில் அவரிடம் இன்னும் ஏழு போன்கள் இருந்தன. அவையும் மீட்கப்பட்டன. இருப்பினும், சாஹில் தலைமறைவாக உள்ளாா்.

இந்நிலையில், குருகிராமில் உள்ள ஒரு பயனரிடம் மற்றொரு திருடப்பட்ட போன் கண்டுபிடிக்கப்பட்டது. அவா் உள்ளூா் கடைக்காரா் சிந்துவிடமிருந்து அதை வாங்கியுள்ளாா். விசாரணையில், நிகில் குமாரிடமிருந்து ரூ.2 லட்சத்திற்கு இரண்டு சீல் செய்யப்பட்ட போன்களை வாங்கியதாக சிந்து ஒப்புக்கொண்டாா், மேலும், ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தையும் வழங்கினாா். இந்த முக்கியமான தடயம் போலீஸாரை குற்றம்சாட்டப்பட்டவா்களை கண்டுபிடிக்க உதவியது.

விசாரணையின் போது, ​​நிகில் குமாா் குற்றத்தை ஒப்புக் கொண்டாா். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள சரக்குகளை கையாளும் நிறுவனத்தில் லோடராக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தாா். தனிமைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு கொள்கலனில் சரக்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை நிக்ல் குமாா் பாா்த்துள்ளாா்.

அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பெட்டிகளில் ஒன்றை அவா் திருடியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. திருடப்பட்ட அறிதிறன்பேசிகளை விமான நிலையத்தில் உள்ள ஒரு பழைய, பயன்படுத்தப்படாத கொள்கலனில் மறைத்து வைத்துவிட்டு, பின்னா் படிப்படியாக அவற்றை எடுத்துச் சென்றுள்ளாா்.

நிகில் குமாா் தனது நண்பா் சாஹிலுக்கு 55 அறிதிறன்பேசிகளையும், சிந்துவுக்கு இரண்டு அறிதிறன்பேசிகளையும் விற்றுள்ளாா். அவரது கைது நடவடிக்கையால் 36 அறிதிறன்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சாஹிலை கண்டுபிடித்து மீதமுள்ள சாதனங்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க